Home Blog Works Contact

சிந்து சமவெளி நாகரிகம் தமிழ் நாகரிகமா ?


சிந்து சமவெளி நாகரீகம் தமிழ் நாகரிகமா என்று ஒற்றை வார்த்தையில் சொல்லவேணும் என்றால் இல்லை என்று தான் கூற முடியும். அதரக்கான காரணத்தை நான் பதிவிடுகிறேன்.

ஏன் சிந்து சமவெளி , தமிழ் மக்களோடு ஒப்பிடபடுகிறது?

இந்தியா நாட்டில் பெரும்பாலான குடிகள் இரு உள்ளன , ஒன்று ஆரியர்கள் மற்றொன்று நாகர்கள் . ஆரியர்கள் கி.பி 1200 தொட்டு வந்ததாக தற்போதய அகல்வாராய்ச்சி சான்றுகள் நமக்கு வெளிபடுதிகிறது . அப்போது அதற்க்கு முன் சிந்து சமவெளியில் இருந்தவர் யார் என்ற கேள்வி பரவலாக எழுப்ப பட்ட நிலையில் , அதை அடுத்து வந்த அரசியலே தமிழ் மக்கள் தான் சிந்து சமவெளியின் பூர்வகுடி என்னும் வாதம்.

கீழடியில் கிடைத்த சிந்து சமவெளி தொடர்பு

கீழடி அகழ்வாய்வுகள் மற்றும் சிந்து சமவெளி நாகரீகத்திற்கிடையிலான தொடர்பு தமிழரின் தொன்மையான எழுத்து மரபை வெளிச்சத்துக்கு கொண்டு வருகிறது. கீழடியில் கண்டெடுக்கப்பட்ட தமிழ்ப் Brahmi எழுத்துக்கள் (கிமு 6ஆம் நூற்றாண்டு) மிகப்பழமையான எழுத்து மரபை உறுதிப்படுத்துகின்றன. இதேபோல், சிந்து சமவெளி (3300–1300 BCE) எழுத்துக்களும் ஒரு குறியீட்டு மொழியாக இருந்துள்ளமையைச் சொல்கின்றன. இரண்டிலும் காணப்படும் நீர்த்தொட்டி அமைப்புகள், வாணிக முறைகள், கிராமப்புற கட்டமைப்பு போன்றவை ஒரு கலாச்சார இணைப்பை சுட்டிக்காட்டுகின்றன. சில அறிஞர்கள் சிந்து எழுத்து மரபும் தமிழ் எழுத்துமுறை பூர்வீகத் தொடர்பைக் கொண்டிருக்கலாம் எனக் கருதுகின்றனர். அதனால், கீழடி ஆய்வுகள் தமிழர்களின் நாகரீகம் நீண்ட வரலாற்றுப் பின்புலத்தைக் கொண்டதென உறுதிசெய்கின்றன.