எனது தமிழ் கவிதைகள்
அளவற்ற ஆற்றல்
ஆயிரம் முறை அடி பெற்று வீழ்ந்தாலும்
பெற்ற அனைத்தும் வீன் துரவென இழந்தாலும்
சான்றோர் அனைவர் உருதியன கைவிடபட்டாலும்
ஒளியற்று என்னுலகம் இருளில் மறைந்தாலும்
யான் என்றும் சோர்ந்து மடிய மாட்டேன்
ஆயிரத்து ஓராவது முறையும் கத்தியை தீட்டுவேன்
அனுமன் புஜங்கள் போன்று புத்தியை தீட்டுவேன்
அளவற்ற ஆற்றலும் அருளும் உள்ளவன் நான்
-------
நினைவுகளின் வானவெடிக்கை
நினைவுகள் பின்னபட்டவையே
அன்று வரை மனதிலில்லா நிகழ்வு
ஒன்று ஒரே ஒரு துளி படற பளீச்
என்று அதை சுத்தி நடந்து கடந்த
அனைத்தையும் வெடித்து காட்டியது
-------
வீண் சுமை
இறந்தகலத்தில் யான் சுவைத்த
ஆரஞ்சு பழ சாரை மறக்க இயலாது
எஞ்சியுள்ள துவர்ப்புடைய தொழை
என்னில் சுமந்து வாடித் திரிகிரென்
மண்ணிலாவது பயனுள்ள உரமாகட்டுமே
-------
பலதரபட்ட ஆதிகளில் தோன்றிய
பல உணர்வுகளின் ஆறுகள்
பலம் இல்லாது கிடைத்த பாதையில்
பல பல வென வெய்யிலின்
பலவண்ண படங்களை தன்னுள் எடுத்து ,
பல பயணங்கள் கடந்து ,
பல பரிணாமங்கள் விடுத்து ,
பல நாமங்கள் பெற்று ,
பல மொழிகள் ,
பல மக்கள் ,
பல அணைக்கட்டுகள் ,
பல மலர்கள் என வழி வந்த
பழக்கங்களின் இறுதியில்
கோப சமுத்திரதில்
கொப்பளித்து சரணாகதி ஆனது